Friday, February 12, 2010

காரை நகர் வலந்தலை அருள்மிகு அத்திபுரம்கந்தசுவாமி கோவில் நற்பணிச் சபை

மேற்படி ஆலயத்தின் நிர்வாகச் சபையின் வேண்டுகோள்.
அன்பான வலந்தலைக் கிராம மக்களுக்கு
தங்களுக்கு இறைவனின் நல்லாசிகளுடன் எம் இனிய நல்வாழ்த்துக்களுடன் தாங்களும் தங்கள் குடும்பமும் உற்றோரும் கற்றோரும் என்றும் இனிதாக வாழ இறைவனை வேண்டுகின்றோம்.
மேலும் இறைசெயலாலும் காலம் இட்ட கட்டளையாலும் எமக்கு வழங்கப்பட்ட பணியைச் இசெய்வதற்கு கடந்த சித்திரை மாத பெளர்ணமி தினத்தன்று (2009) எமது சமூகம் சேர்ந்து இத்தலத்தில் ஓர் நற்பணிச் சபை உருவாக்கியது யாவருக்கும் தெரிந்ததே மேலும் எம்மால் பொறுப்பேற்கப்பட்டது என்பதை விட இறைவனாலும் காலத்தாலும் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.